மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு- அப்ப தியேட்டர்ல படம் ஓடாதா?மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு- அப்ப தியேட்டர்ல படம் ஓடாதா?

மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று திரையரங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு விடுமுறை என திரை உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை கடைப்பிடிக்க வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள   திரையரங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு திரை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 19.04.2024  அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளது. இதனால் அன்று தியேட்டர்களில் படம் ஓடுவது சந்தேகம் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

கள்ளக்காதலனுடன் உல்லாசம் – தடையாக இருந்த குழந்தைகள் – கொடூரமாக கொன்ற தாய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *