தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள்?தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள்?

Breaking News: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: உள்ளூர் திருவிழா மற்றும் பண்டிகை நாட்கள் முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாளை ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற  இருக்கும் நிலையில் அம்மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அரசு கருவூலங்கள் மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள் – நான்கு நாட்களுக்கு பிறகு வந்த மகிழ்ச்சியான செய்தி!

ஆனால் இந்த முடிவுரை விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. அதுமட்டுமின்றி  மேலும் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம், திருப்பூர் மாவட்டத்திலும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறையை முன்னிட்டு மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *