தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

உதவி பேராசிரியர்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுரியில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் புதிய அறிக்கை ஒன்றை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதில் தமிழ் பாடத்தில் 569 பேர், ஆங்கிலத்திற்கு 656 பேர் என 4,000 காலியிடங்கள் அடங்கும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் இன்று முதல் அடுத்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு ஆகஸ்ட் 8ஆம் தேதி தேர்வு  நடைபெறும் என தெரிவித்துள்ளனர். எனவே தேர்வுக்கு நீண்ட நாள் இருப்பதால் தேர்வர்கள் எப்படியாவது அரசு வேலையை கையில் வாங்கி விட வேண்டும் என்று தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வு தொடர்பாக சந்தேகம் இருந்தாலோ அல்லது கூடுதல் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளத்தை பார்வையிடலாம்.

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *