தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!!தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!!

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் எந்த ஒரு விசேஷ பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” மதுரை மாவட்டம் அத்திப்பட்டி பகுதியில் உள்ள புது மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான நாளை நடக்க இருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

எனவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக நாளை ஏப்ரல் 30ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் நாளை ,மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மதுபான கடையோ அல்லது பார்களோ செயல்பட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின் – கையில் கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக நிர்வாகி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *