அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு - 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு - 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு !

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கு, சிறப்பு நீதிமன்ற வழங்கிய மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஓசூர் அருகே பாகலூரில் அருகே கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது,

இது தொடர்பாக முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து,

சென்னை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த வகையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இழந்தார்.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் – சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகவும்,

மேலும் உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை என்றும், இந்த வழக்கில் பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும் கூறி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *