என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

தியேட்டர் உரிமையாளர் எச்சரிக்கை

பொதுவாக உச்சத்தை தொட்ட நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானால் போது, தியேட்டர் போய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருவார்கள். ஆனால்  மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற நடிகர்கள் நடித்த எந்த படமும் தியேட்டரில் வசூலை ஈட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் படம் வெளியான கொஞ்ச நாட்களில் ஓடிடியில் வெளியீட்டு விடுகின்றனர். இதனால் தியேட்டருக்கு வர நினைப்பவர்கள் கூட  ஓடிடியில் படத்தை பார்த்து விட்டு தியேட்டருக்கு வர மறுக்கிறார்கள்.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, படங்கள் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் இதற்கு ஒரு சமூக முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடி விடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *