“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 3 இதோ!“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 3 இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 2

இருவரின் கண்களும் கதை பேச தொடங்கின..
இருவரின் கைகளும் ஒருவரை ஒருவர் வருடத் தொடங்கின…
இரு விழி பாதையில் கண்ணீர் வடிந்தன…
இனி நீ நான் காதல் என்று மனதுக்குள் அழுத்தமாக கூறி தங்களின் பாச பிணைப்புகளை இணைத்து கொண்டு வாழத் தொடங்கினர்

இன்று இரவு ரிஷி தூக்கத்தை தொலைத்த நிலையில்  புரண்டு புரண்டு படுத்து பார்த்தும் துளி அளவு கூட தூக்கம் வரவில்லை. தன்னை போல் கருணாவும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறாளா? என்று ரிஷி மனம் அல்லாடுகிறது.

எதற்கும் Call செய்து பார்ப்போம் என்று ரிஷி கருணாவுக்கு போன் போகிறான். கருணா போன் அடிக்கிறது.

அவளோ குறட்டை விட்டு தூங்குகிறாள். மறுபடியும் அழைத்தான், ஆனால் கருணா பக்கம் எந்த பதிலும் வரவில்லை.

அப்புறம் அவனோ கருணாவை நினைத்து பார்க்க தொடங்க , சட்டென்று ஒரு போன் Call வருகிறது.

அப்போது இரவு 2 மணி இருக்கும், போனை எடுத்து ஹலோ என்று கூற மறுபக்கம் நான் B3 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து SI மணிகண்டன் பேசுறேன் என்று கூறுகிறார்.

ரிஷி :  சொல்லுங்க சார்
போலீஸ்: உன் பேரு தான ரிஷி
ரிஷி: ஆமா சார், எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க சார்
போலீஸ்: இங்க பக்கத்து ஏரியாவில் உள்ள ஒரு கடைசில லாக்கர ஒடச்சு பணம் திருட்டு போயிருக்கு
ரிஷி: அதுக்கு எதுக்கு சார் எனக்கு போன் பண்ணீங்க
போலீஸ்: சந்தேக கேஸ்ல உன்ன விசாரிக்கணும் வெளியே வா
ரிஷி: சார் நான் எதுவும் பண்ணல சார்,
போலீஸ்: சரிப்பா நீ கொஞ்சம் வெளியே வா சாதாரண விசாரணை தானா வா
ரிஷி: சார் நான் நாளைக்கு காலை ஸ்டேஷனுக்கு வந்துறேன் சார், இப்ப வந்த என் வீட்டுல என்ன தப்ப நினைப்பாங்க சார்
போலீஸ்: சரி ok, காலை 10 மணிக்கு நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணும் இல்லனா, நான் வீட்டுக்கு வருவேன் என்று கூறி போலீஸ் அங்கு இருந்து கிளம்புகிறது.

என்ன செய்வதென்று  தெரியாமல் தனக்கு தானே பினாத்தி  கொண்டு இருந்த ரிஷி, இதை கருணாவிடம் கூற வேண்டும் என்று அவளது நம்பருக்கு Call செய்ய நினைக்கிறான்.

ஆனால் அதற்குள் தன் காதலன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்று உணர்ந்த கருணா ரிஷிக்கு கால் செய்து என்ன இத்தனை கால் பன்னிருக்க என் நியாபகமாக இருக்க என்று கேட்க,

ஒரே நொடியில் போலீஸ் போன் செய்ததையே மறக்கிறான் ரிஷி. உன் கூடவே இருக்கணும்னு தோணுது என்று தனது காதலை அவளின் வெளிக்காட்டிக் கொண்டு இருந்தான். அப்போது நம் எங்கேயாவது வெளியே போகலாமா நாளைக்கு என்று கருணா கேட்கிறாள்.

நாளைக்கு College இருக்கு அப்புறம் எப்படி வேலையே போறது என்று கேட்க லீவு போட்டு போலாம் என்று கருணா கூறுகிறாள்,

ரிஷியும் அப்பனா ஓகே என்று கூறி போய் தூங்கு என்று சொல்லி love you d, good night கூறி தூங்க செல்கிறான்.

விடிகிறது…

தனது காதலியுடன் முதல் முறை வெளியே செல்கிறோம் என்ற ஆனந்தம் ரிஷி மனதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.

ரிஷி அப்பா வெளியே சென்ற நிலையில் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வதாக அம்மாவிடம் கூறி பைக்கை எடுக்கிறான்.

பைக்கை துடைத்து கொண்டிருக்கும் போது அருகில் ஒரு மொபைல் போன் கீழே விழுந்து கிடந்துள்ளது.

அதை பார்த்த அவன் அந்த போனை செக் செய்து பார்க்கிறான் display உடைந்த நிலையில் போன் on ஆனது.

மொபைலை எடுத்து கொண்டு தனது காதலியை பார்க்க செல்கிறான் ரிஷி.

இருவரும் சினிமாவுக்கு சென்று ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை பார்க்கிறார்கள். அப்புறம் இருவரும் ஹோட்டலுக்கு செல்கின்றனர்.

அப்போது ரிஷி தனது இருசக்கர வாகனத்தை ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார்.

அந்த பக்கம் யாழினி தனது தோழி திருமணத்திற்கு செல்ல பேருந்து Bus Stop-ல் நின்று கொண்டிருந்தாள்.

அந்த சமயம்  Bus Stop-ல் இருந்து சில இளைஞர்கள் யாழினியை வருணித்தபடி கிண்டலடித்து கேலி செய்கின்றனர்.

அப்போது அந்த பக்கம் பைக்கில் வந்த கதிரவன் யாழினியை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி Bus Stand போய் அவளிடம் பேச நினைக்கிறான்.

அந்த வேளையில் அந்த இளைஞர்கள் யாழினியை குறித்து தரக்குறைவாக பேச அதில் கடுப்பான கதிரவன்  அவர்களை வெளுத்து வாங்குகிறான்.

அங்கிருந்து தப்பி ஓடிய அவர்களை விரட்டி விரட்டி அடிக்கிறான். கடைசியாக ரிஷி – கருணா சென்ற ஹோட்டலுக்கு வெளியே அந்த இளைஞர்களில் ஒருவர் சென்றார்.

துரத்தி துரத்தி அடித்த கதிரவன், அருகில் இருந்த ஒரு வாளியை எடுத்து அந்த நபரை அடிக்கும் பொழுது அவர் விலக ரிஷி வாகனத்தை சேதப்படுகிறான்.

இனிமேல் என் ஆள பத்தி தப்பா பேசுன கொலை பண்ணிடுவேன் என்று மிரட்டி அங்கிருந்து செல்கிறான்.

கொஞ்சம் நேரம் கழித்து ஹோட்டலுக்கு வெளியே வந்த ரிஷி உடைந்து போய் கிடந்த பைக்கை பார்த்து கண் கலங்கி நிற்கிறான்.

அப்பாவிடம் என்ன சொல்ல போகிறேன் என்று அழுத அவன் அங்கிருந்த வாட்ச் மேனிடம் யார் இதை செய்தது என்று கத்தி சண்டை போடுகிறான்.

சிறு நாழிகைக்கு பிறகு ரிஷி வீட்டுக்கு சென்றான். அப்போது பைக் எங்கே என்று அப்பா கேட்க, நடந்ததை கூறினான். இதனால் ஆத்திரம் அடைந்த ரிஷி அப்பா அவனை அடிக்கிறார்.

தொடரும்..,

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *