“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!

தெகட்டாத காதல் எபிடோடு 3

தெகட்டாத காதல் எபிசோடு 4: உன்னால் ஒரு பைக்கை கூட பாத்துக்க தெரியாதுல, எனக்கு உன்ன விட என்னோட பைக் தாண்டா எனக்கு முக்கியம் என்று ரிஷி அப்பா அவனை திட்டுகிறார்.

அப்போது வீட்டு காலிங் Bell அடிக்கிறது. ரிஷியின் தாயார் கதவை திறந்து பார்த்த போது மிக ஸ்டைலாக என்ட்ரி கொடுக்கிறார் SI மணிகண்டன்.

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!

10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வர சொன்ன வர மாட்டியா என்று ரிஷி கன்னத்தில் பளார் என்று அறைகிறார்.

தனது வீட்டுக்குள் வந்து தன் மகனை ஏன் அடித்தீர்கள் என்று ரிஷி தந்தை கோபத்துடன் எகிற,

உன் மகன் ஒரு கடையில் கொள்ளை அடித்து வந்துட்டான் என்று கூற போலீசிடம் கூனிக்குறுகி நின்றார் ரிஷி அப்பா.

ரிஷியை அடித்து இழுத்து செல்லும் போது அக்கம் பக்கத்தினர் அந்த குடும்பத்தை ஒரு விதமாக பார்த்தனர்.

அந்த பக்கம், கதிரவன் யாழினியை கேலி கிண்டல் செய்தவர்களை அவளிடம் அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைக்கிறான்.

அந்த நொடியில் இருந்து யாழினி கண்ணுக்கு கதிரவன் ஒரு ஹீரோவாக தெரிய ஆரம்பித்தான்.

இரு விழி பார்வையால் அவனது மனதை கொள்ளை அடித்து கொண்டிருந்த அவளிடம் பார்த்து இரு இனிமேல் என்று கூறுகிறான்.

ஆனால் அதற்கு அவள் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாம கதிரவனின் கண்ணை பார்த்து கொண்டே சென்றால்.

அந்த பக்கம், போலீஸ் ரிஷியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று லாக்கப்பில் வைத்து அடியோ அடி அடிக்கின்றனர்.

இதனால் சோர்ந்து போன ரிஷி மயக்கம் அடைகிறான். தன் காதலனுக்கு ஏதோ கெட்டது நடக்கிறது என்று உணர்ந்த கருணா ரிஷிக்கு போன் செய்கிறாள்.

ஆனால் ரிஷி போன் Switch offல் இருந்துள்ளது. இதனால் பதறிப்போன கருணா ரிஷி நண்பர்களிடம் விசாரிக்க, அவனை போலீஸ் பிடித்து சென்றதை தெரிந்து கொண்டு ஸ்டேஷனுக்கு செல்கிறாள்.

சோர்ந்து மயக்கமடைந்த ரிஷியை தண்ணீர் ஊற்றி எழுப்பி இந்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு போலீஸ் அடித்து துன்புறுத்துகிறார்.

இதை நான் செய்யல சார் என்று ரிஷி வலி தாங்க முடியாமல் அழுகும் பொழுது அங்கிருந்த மற்ற கைதிகளுக்கு கண்களில் நீர் வடிந்தது.

சிறு நாழிகைக்கு பிறகு கருணா வக்கீலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால். எதற்காக அவரை கைது பண்ணிருக்கீங்க என்று விசாரிக்க,

இவன் ராத்திரி நேரத்துல அவன் வீட்டு பக்கத்துல இருக்க ஒரு நகை கடையில் நகையை திருடி இருக்கான்.

நான் பண்ணல கருணா அழுகும் குரலில் மெதுவாக ரிஷி கூற, அவன் அப்படி பன்னிருக்க மாட்டான் சார்.

எந்த சாட்சில அவரு தான் பண்ணாருன்னு சொல்றீங்க என்று வக்கீல் கேட்க, கடைல இருந்த ஒரு செல்போனும் காணோம்.

அது அவன்ட இருந்து தான் எடுத்துருக்கோம் என்று கூறி ரிஷி கல்லூரிக்கு கிளம்ப பைக்கை எடுக்கும் போது கீழே கிடந்த போனை போலீஸ் காமிக்கிறது.

இத வச்சு தான் இவன் தான் இந்த திருட்ட பன்னிருக்கான்னு `சொல்றோம். இதற்கு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

அந்த பக்கம் கதிரவன் யாழினியை நினைத்து “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை” என்று ஜாலியாக பாடி கொண்டே வீட்டுக்குள் வருகிறான்.

அப்போது அழகி என்ன பாட்டுல பலமாக இருக்கு என்று கூற ஷாக்காகிறான் கதிரவன்.

யாருக்கு இந்த பாட்டு கேட்க, வேற யாருக்கு பாட போறேன் உன்ன பாத்து தான் பாடினேன் அழகி என்று சொல்லி சமாளிக்கிறான்.

என்னமோ சரி இல்ல Brother, சரி நைட்டு எப்ப வந்த நீ என்று கதிரவனிடம் கேட்கிறாள்.

அதையே கேக்குற அழகி நைட்டு ஒரு சரியான சம்பவம் நடந்துருச்சு.

என்ன அண்ணே சொல்லுற அப்படி என்னதான் ஆச்சு சொல்லு என்று விடாமல் கேட்கிறாள்.

தங்கச்சி கேட்டவுடன் மறைக்காமல் நைட்டு நடந்ததை பற்றி அவளிடம் கூறுகிறான் கதிரவன்
.
நேத்து நைட்டு 12 மணிக்கு வேலை  முடிஞ்சுருச்சு லோடு இல்லனு சொல்லிட்டாங்க. சரி அப்ப நம்ம வேகமா வீட்டுக்கு போவோம் அங்கிருந்து கிளம்பிட்டேன்.

அந்த நேரம் பார்த்து வயிறு லேசா பசிச்சுச்சா.

சரி நம்ம கோனார் கடைல சாப்பிட போவோம்னு போய் 4 பன் பரோட்டா ஒரு சிக்கன் ரைஸ் தின்னுட்டு பொடி நடையா நடந்து வந்தேன்.

அப்போன்னு பார்த்து ஒருத்தன் ஓடி வந்து என்னை இடித்து கீழே விழுந்தான். என்னடா நம்மள இடிக்கிறான் பார்த்த, அவன் பை முழுக்க நகையா? இருந்துச்சு.

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 4) இதோ!

எனக்கு சந்தேகமாக இருந்தனால அவனை பிடிச்சு அடிச்சேன் அப்போ அவன் கைல இருந்த ஒரு மொபைல் போன்,

பறந்து ஒரு வீட்டுக்குள்ள போக என்ன கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான் என்று கூறுகிறான்.

அதை கேட்ட  அழகி உனக்கு எதுவும் ஆகலைல  என்று கண் கலங்குகிறாள்.

ஏ லூசு எனக்கு ஒன்னும் ஆகல அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போயிட மாட்டேன் நேற்று அழகிக்கு ஆறுதல் கூறுகிறான்.

அப்போது வெளியே ஹாரன் சவுண்ட் கேட்க, உடனே தங்கச்சியை விட்டு ஓடி வெளியே பார்க்கிறான்.

யாழினி வச்ச கண்ணை எடுக்காமல் கதிரவனை பார்த்து கொண்டே எதிரே வந்த ஒரு பாட்டி மீது ஏத்துகிறாள்.

அந்த பாட்டி 18+ வார்த்தைகளை போட்டு திட்ட, அது கூட கவனிக்காமல் இரண்டு பெரும் கண்ணாலே காதலை பரிமாறி கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் கதிரவன் இரவு நேர வேலைக்கு செல்கிறான்.

அந்த பக்கம் ரிஷியை காப்பாற்ற முடியாமல் தவித்து கொண்டிருக்கிறாள் கருணா.

தொடரும்., 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *