“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 5) இதோ!“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 5) இதோ!

தெகட்டாத காதல் – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: கதிரவன் திரும்ப தனது வேலைக்கு புறப்பட்டு செல்கிறான்.

அந்த சமயத்தில் யாழினி கடைக்கு செல்ல தனது வண்டியை எடுத்து செல்கிறாள்.

அவளை பின்தொடர்ந்து கதிரவன் செல்ல, போகும் வழியில் கருணா அழுது நின்று கொண்டிருந்ததை பார்த்து யாழினி அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே தனது வண்டியை நிறுத்தி கருணாவிடம் என்ன ஆனது என்று வினாவ தொடங்கினாள். அவளுக்கு பின்னால் நின்று கொண்டு கருணா கூறியதை கதிரானவனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கருணாவும் ரிஷிக்கு நடந்ததையெல்லாம் கூறி அழுக அவளுக்கு தெம்பு கொடுக்கிறாள் யாழினி.

இரண்டு பெண்களும் கவலையில் இருப்பதை பார்த்த கதிரவன் கருணாவிடம் சென்று நேத்து நைட் நான் வேலையை முடித்துவிட்டு வரும் பொழுது தான் இந்த நகை திருட்டு போச்சு.

திருடி சென்ற முகம் எனக்கு அப்படியே நியாபகம் இருக்கிறது. எங்கே உங்க ரிஷி போட்டோ காட்டுங்க என்று கேட்க, கருணாவும் ரிஷி போட்டோவை காட்டுகிறாள்.

போட்டோவை பார்த்து ஐயோ திருடுவது இவரு இல்லை என்று கதிரவன் அடுத்த கூறுகிறான். இதை போலீஸிடம் சொல்லுங்க என்று கதிரவன் காலில் கருணா விழுந்து அழுகிறாள்

அப்புறம் கருணாவை எழுப்பி ஏன் காலுல விழுகிறீங்க, நான் போலீசிடம் சொல்லுறேன் என்று ஆதரவாக பேசி போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றான் கதிரவன்.

அங்கு சென்று பார்த்தால் SI மணிகண்டன் கதிரவனுக்கு நெருங்கிய நண்பர்.

உடனே இருவரும் கட்டி தழுவி எத்தனை நாள் ஆச்சு உன்ன பார்த்து என்று அன்பை பரிமாறி கொள்கின்றனர்.

நீ எப்போது போலீஸ் வேலைக்கு சேர்ந்த எப்போ ஊருக்கு வந்த என்று இருவரும் மாறி மாறி தங்களை பற்றி பேசிக்கொண்டனர்.

சிறு நாழிகைக்கு பிறகு எதுக்கு நீ இவங்களோட வந்திருக்க என்று கதிரவனிடம் மணிகண்டன் கேட்க, நேற்று நகை திருடிட்டு போனது இவரு இல்லை என்று கூறுகிறான்.

இதையடுத்து நேற்று நடந்தவற்றை எல்லாம் போலீசிடம் கதிரவன் கூறுகிறான்.

அதன்பின்னர் ரிஷியை ஜாமீனில் வெளியே விட்டனர். ஆனால் இன்னும் இந்த கேஸ் முடியவில்லை என்றும் எப்போது கூப்பிட்டாலும் ஸ்டேஷனுக்கு வரணும் என்றும், வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று காவல்துறை அதிகாரி மணிகண்டன் வார்ன் பண்ணி அனுப்பி வைக்கிறார்.

உடலின் பல காயங்களுடன் வெளியே வந்த ரிஷியை பார்த்த கருணை, அவனை கட்டி தழுவி கண்ணீர் வடிக்கிறாள்.

அந்த பக்கம் கதிரவன் மீது யாழினிக்கு மேலும் பாசம் அதிகரிக்க, அங்கிருந்து எல்லாரும் கிளம்பினர்.

சில மணி நேரத்திற்கு பிறகு..,

கதிரவன் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறான்.

அப்போது அவனுடன் வேலை பார்க்கும் ஒரு நபர் போதை பொருளை கை மாற்றி விட்டால் 3 கோடி கிடைக்கும் என அவனிடம் கூறுகிறான்.

இதை கேட்டதும் அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து யார் கிட்ட வந்து என்ன பண்ண சொல்ற அவனை வெளுத்து வாங்குகிறான்.

அப்புறம் அங்கிருந்து அந்த நபர் நடையை கட்டிய கொஞ்ச நேரத்தில் கதிரவனின் மொபைலுக்கு போன் வருகிறது.

அதில் வீல் சேரில் இருந்த தன்னுடைய தங்கை அழகி சமைக்கும் போது எதிர்பாராத விதமாக அடுப்பில் விழுந்துள்ளார்.

அதில் அழகிக்கு உடல் மற்றும் முகம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் உடனே Hospital க்கு வருமாறு பக்கத்து வீட்டு காரர் போனில் கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சியான கதிரவன் தனது தங்கச்சி பெயரை சொல்லி அழுது கொண்டே ஓடுகிறான். அவளுக்கு என்ன ஆனது ஏதானது என்று தெரியாமல் பதறி போய் மருத்துவமனையை சென்றடிக்கிறான்.

அப்போது மருத்துவரை பார்த்த கதிரவன் தங்கச்சிக்கு இப்போ எப்படி இருக்கிறது என்று கேட்க, ரொம்ப சீரிஸாக இருப்பதாகவும் உடனே ஆபரேஷன் பண்ணி ஆகணும் என்று மருத்துவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி ஆபரேஷன் செய்ய 20 லட்சம் செலவாகும் என்று மருத்துவர் கூற அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று அழுகிறான்.

அதுமட்டுமின்றி இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு நமக்கு இல்லனா தங்கச்சி பொழைக்க மாட்ட என்று மருத்துவர் கூறுகிறார்.

உடனே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்ற கதிரவன் அங்கே இங்கே பணத்தை தேடி அலைகிறான்.  அந்த சமயத்தில் யாழினி தன்னிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தை கொடுக்கிறாள்.

அங்கே இங்கே வாங்கியதில் கதிரவனால் வெறும் 2 லட்சம் மட்டுமே புரட்ட முடிந்தது. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கி ரோட்டோரம் நிற்கிறான்.

அப்போது போதை பொருள் கடத்தி தருவதாக கேட்ட நபர் அந்த பக்கம் செல்ல அவனை பிடித்து நான் செய்கிறேன் என்று ஒப்பு கொள்கிறான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் கதிரவனுக்கு அட்வான்ஸாக 50 லட்சம் பணத்தை அந்த நபர் கொடுக்க, அவன் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கிறான்.

உடனே அங்கிருந்து கிளம்பி கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சென்று பணத்தை கவுண்டரில் கட்டுகிறான். ஆபரேஷனும்   நல்லபடியாக முடிகிறது.

அந்த பக்கம் ரிஷியின் அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. 

தொடரும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *