“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 6) இதோ!“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 6) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: அழகி மெல்ல மெல்ல கண்ணை திறக்கிறாள்.

கண்கள் கலங்கியபடி கதிரவன் அவளின் கையை பிடித்து, உனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டு தலையை கோதி விடுகிறான்.

நான் நல்லதா அண்ணே இருக்கேன் என்று நீ கவலை படாதே என்று கூறுகிறாள்.

எதுக்கு நீ சமைக்க ட்ரை பண்ண நானே பண்ணி கொடுத்திருப்பேன்ல இப்ப பாரு எப்படி ஆயிருச்சு என்று கூற, யாரு சமைக்க போன நீ எப்ப வருவேன்னு நான் டிவி தான் பார்த்துட்டு இருந்தேன்.

அப்போ ரெண்டு பேரு சண்டை போட்டு என்னை கீழே தள்ளிவிட்ட போது கீழே விழுந்துவிட்டேன் என்று கூறுகிறாள்

உடனே கண்ணு சிவக்க யாருன்னு உனக்கு தெரியுமா? என்று கோபத்துடன் கேட்கிறான்.

ஒருவன் படிச்சா பையன் மாதிரி இருந்தான், இன்னொருத்தன் ரவுடி மாதிரி இருந்தான் அன்னே. அதுல படிச்ச பையன் மாதிரி இருந்தவன் என்ன அடுப்புல விழ விடாம தள்ளி விட்டான் அண்ணன். அத இப்படி என்று கூறுகிறாள்.

உடனே அவனுக்கு கால் வருகிறது. எப்போ சரக்க கை மாத்தி விட போற ஏற்று காசு கொடுத்தவன் கேட்க தொடங்கிவிட்டான்.

நாளைக்கு நைட் கண்டிப்பாக நான் நீங்க சொன்ன இடத்துல கொடுத்துறேன் என்று கூறுகிறான்

அந்த பக்கம் ரிஷியின் அக்காவுக்கு தடபுடலாக கல்யாணம் ஏற்பாடு நடைபெறுகிறது.

ஆனால் ரிஷி போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததை நினைத்து கொண்டே சோகமாக இருக்கிறான். அப்போது அவனுடைய அம்மா எல்லாம் சரியாயிடும் நீ எதுவும் நினைக்காத அப்பா சீக்கிரம் மாறிவிடுவார் என்று ஆறுதல் கூறுகிறார்.

அப்பா என்ன நினைக்கிறான்னு தெரியலமா, ஆனா கொஞ்ச நாளா நான் செய்யாத தப்புக்கெல்லாம் மாட்டிக்கிறேன்மா. எனக்கு நேரமே சரி இல்லமா என்று அம்மாவின் மடியில் சாய்ந்து அழுகிறான்.

அப்போது ஒரு ரிஷிக்கு மொபைலுக்கு Call வருகிறது. அதில் Honey என்று எழுதப்பட்டு இருந்தது. அதை பார்த்த அம்மா என்னடா போன்ல ஹனினு வருது.

அம்மா அது Friendமா என்று கூற, இல்லையே ஏதோ  தப்பா இருக்கேடா என்று கலாய்க்கிறாள்.

உடனே ரிஷி கொஞ்சம் சிணுங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான். இவ்வளவு நேரம் சோகமா பேசிட்டு இருந்தான், இப்ப போன் வந்தோனே சந்தோஷமா ஆயிட்டானே, அப்ப ஏதோ சம்திங் சம்திங் இருக்கு போலயே.

மொபைல் போனை எடுத்து பேச தொடங்குகிறான். அந்த பக்கம் கருணா எல்லாம் ஓகேவா என்று   அவளும் ஆறுதல் கூறுகிறாள்.

நாளைக்கு நைட் அக்கா நிச்சயதார்த்தத்திற்கு வந்துரு என்று சொல்கிறான்.

விடிகிறது..,

அழகியை எப்போது டிஸ்சார்ஜ் செய்ய போகுறீங்க என்று டாக்டர் கேட்க, இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும் என்று கூறி கதிரவன் வீட்டுக்கு செல்கிறான்.

அங்கு சென்று போதை பொருளை கை மாற்றுவதற்கான வேலைகளை செய்து வருகிறான்.

சுண்ணாம்பு பாக்கெட்டில் போதை பொருளை மறைத்து வைத்து கொடுக்க திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்.

ரெட் கலர் சட்டை போட்டு கருப்பு கலர் பேண்ட் அணிந்து போதை பொருளை Hero honda பைக்கில் எடுத்து செல்கிறான்.

வேகமாக சென்ற போது ஒரு பாக்கெட் கீழே விழ அது அந்த பக்கம் வந்த போலீஸ் கையில் சிக்குகிறது.

உடனே அவனை பிடிக்க கதிரவனின் சட்டை, பைக் உள்ளிட்டவைகளை வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுக்கிறார்.

அந்த பக்கம்  நிச்சயதார்த்தம் நடக்க கொஞ்சம் நேரம் இருக்கும்  நிலையில், கருணா போன் செய்து நான் கிளம்பி இருக்கிறேன் என்னை வந்து கூப்பிட்டு போ என்று கூறுகிறாள்.

உடனே கருணாவை அழைக்க ரிஷி பைக்கை எடுத்து செல்கிறான்.

கருணாவின் வீட்டுக்கு பக்கத்து ஏரியாவில் வந்து கொண்டிருக்கும் போது போலீஸ் ரிஷியை வளைத்து பிடிக்கிறார்கள்.

இதில் என்ன சோகமான செய்தி என்றால் ரிஷி சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அதே போல்  HERO HONDA பைக்கில் சென்றுள்ளான்.

அதனால் தான் அவனை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றுள்ளனர்.

தொடரும்.., 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *