திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - என்ன நடந்தது?திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி - என்ன நடந்தது?

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி: இப்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் நெஞ்சு வலி காரணமாக உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கேசரம் கிராமத்தில் ஒரு புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள திருத்தணி மாவட்டம் கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நரேஷ். இவர் பெங்களூருவில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து அவருக்கு சுவாதி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் கல்யாணமாகி கொஞ்ச நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். heart attack

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி

திருப்பதி கோவிலுக்கு சென்ற தம்பதிகள் ஏழுமலையானை வழிபடுவதற்காக படி வழியாக பாதயாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் நரேஷ்  2 ஆயிரத்து 350 வது படியில் ஏறும் போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனே, சக பக்தர்கள் நரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். Thiruthani

Also Read: விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்? வெளியான பரபரப்பு தகவல்!!

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த நிலையில் நரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதாவது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார். இப்படி திருமணமான 15 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.tirupati temple

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *