திருவனந்தபுரம்  பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல் - அரசு பஸ் டிரைவர் கைது!!திருவனந்தபுரம்  பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல் - அரசு பஸ் டிரைவர் கைது!!

திருவனந்தபுரம்  பெண் மேயர் மொபைலுக்கு வந்த ஆபாச குறுந்தகவல்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு பேருந்து ஒன்று திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் காருக்கு வழிவிடாமல் சென்றதால் டிரைவர் யதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும் மேயர் அவர் மீது புகார் கொடுத்த பேரில் அரசு பேருந்து டிரைவரை கைது செய்தனர். அதன் பின்னர் தனது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி மேயர் மீது அந்த டிரைவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் அங்கு எடுபடவில்லை.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தின்  உண்மை என்பதை அறிய பேருந்தில் இருந்த கேமராவை ஆய்வு செய்யும் படி மந்திரி கணேஷ்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் போலீசில் புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது அரசு பேருந்து டிரைவர் ஒருவர் தனது ஆபாச படங்கள் மற்றும் தகவல்கள் மற்றும் கொலை மிரட்டல் அனுப்புவதாக கூறி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவரான கரை யாட்டுகுன்னல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித்(வயது35) என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CSK அணி  Play-Offக்குள் செல்ல வாய்ப்பு இருக்கா? முட்டுக்கட்டை போடும் SRH?  சவாலை எதிர்கொண்டு முன்னேறுமா சென்னை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *