வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - தெற்கு ரயில்வே அறிவிப்பு !வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு. தமிழகத்தில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் வரும் வரும் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகம் விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்ரயில்வே நிர்வாகத்திடம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தொடந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருநெல்வேலி முதல் திருச்செந்தூருக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *