திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் - போலீஸ் தீவிர விசாரணை!!திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் - போலீஸ் தீவிர விசாரணை!!

திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் அவர் கொலை எரிந்த உடலாக சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜெயக்குமார் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அது போலீஸ் கையில் சிக்கிய நிலையில், அந்த கடிதம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக புதிய தடயம் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட போது அவருடைய வாயில் பாத்திரங்கள் துலக்கும் இரும்பு பிரஸ் துகள் ஒன்று இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயக்குமார் வீட்டில் விசாரணை நடத்திய போது பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த கவரில் இருக்கும் கைரேகையை கண்டுபிடிக்க கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

மயிலாடுதுறையில் காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு – டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *