பைக் டேங்கில் உட்கார்ந்து வைப் செய்த காதல் ஜோடி!! குண்டுகட்டாக தூக்கிய காவல்துறை!!பைக் டேங்கில் உட்கார்ந்து வைப் செய்த காதல் ஜோடி!! குண்டுகட்டாக தூக்கிய காவல்துறை!!

Breaking News: பைக் டேங்கில் உட்கார்ந்து வைப் செய்த காதல் ஜோடி: இன்றைய ஜெனரேஷன் எங்கே போய் கொண்டிருக்கிறது என்று தான் தெரியவில்லை. அந்த அளவுக்கு 2k கிட்ஸ் அட்டூழியங்கள் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்ல போனால்  ரீல்ஸ் செய்வதில் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.

அதிலும் காதலர்கள் வரம்புக்கு மீறி நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் வாகனம் ஓட்டியபடியே ரொமான்டிக் ரீல்ஸ்-களை பதிவு செய்தனர். அதாவது திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளம் காதல் ஜோடி தான் இந்த வேலையை பார்த்துள்ளனர்.

அதில் அந்த பொண்ணு பைக்கை ஓட்ட, காதலன் டேங்க் மீது உட்கார்ந்து காதலியின் கன்னத்தை கிள்ளி கொண்டே செல்கிறார். இதில் என்ன இருக்கிறது அது அவரவர் விருப்பம் என்று நீங்கள் கூறலாம்.

அவர்கள் இரண்டு பேரும் ஹெல்மெட் போடவில்லை. அதுவும் மற்ற வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்றதாக கூறி,

அதுமட்டுமின்றி சாலை விதிகளையும் மீறி நடந்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறி திருப்பூர் போலீசார் அந்த ஜோடி மீது ஆக்சன் எடுத்துள்ளது.

Also Read: சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து – ஒரே நொடியில் போன உயிர்!!

அதாவது, அந்த வீடியோ வைரலான நிலையில் காதலர்கள் ஓட்டிய வாகனத்தின் உரிமையாளர் ராமன் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும்,  

லைசென்ஸ் இல்லாமல் பைக்கை ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கியது என மொத்தமாக ரூபாய் 13,000 அபராதம் விதித்துள்ளனர். tiruppur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *