TNHRCE சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் - முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார் !TNHRCE சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் - முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார் !

தமிழ்நாடு அரசின் TNHRCE சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார் உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

மேலும் இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடை தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளிக்கு முதல் நாள்(30.10.2024) பொது விடுமுறை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு?

அத்துடன் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தத்க்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *