தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது தென் மாவட்டங்களில் கனமழை புரட்டிப்போட்டு வரும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர பகுதிகளிலும் மற்றும் காரைக்கால், புதுசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். மேலும் தென் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *