நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 3302 மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதே போல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 40 மையங்களில் 14 ஆயிரத்து 688 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கிடையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல்வாதிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய தவெக தலைவர் தளபதி விஜய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,” இன்று முதல் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.    

சுரங்க பாதையில் மாட்டிக்கொண்ட 41 உயிர்கள்.., காப்பாற்றியவர் வீட்டை சுக்குநூறாக்கிய அரசு..,, காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *