சிறுமியை பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்ட குரங்குகள் - அதிசயம் ஆனால் உண்மை!சிறுமியை பாலியல் வன்கொடுமையிலிருந்து மீட்ட குரங்குகள் - அதிசயம் ஆனால் உண்மை!

உத்தர பிரதேசம் சிறுமி பாலியல் வன்கொடுமை: இந்த உலகத்தில் எத்தனையோ வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சில சம்பவங்கள் சினிமாவில் கூட பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே அமைந்துள்ள பக்பத் என்ற ஊரில் மழலையர் பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். அந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று ஆளில்லாத வீட்டுக்குள் அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

உத்தர பிரதேசம் சிறுமி பாலியல் வன்கொடுமை

அந்த சமயம் பார்த்து திடீரென, அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஓடி வந்துள்ளது. வந்தது மட்டுமின்றி, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அந்த நபரை கடிக்கப் கூட்டமாக பாய்ந்துள்ளன. குரங்குகளை சமாளிக்க முடியாமல் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். Uttar Pradesh monkeys

Also Read: தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி –  TNSTC வெளியிட்ட குட் நியூஸ்!

இதனால், பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய சிறுமி, தனது வீட்டுக்கு ஓடி வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *