உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - பதறவைக்கும் வீடியோ!உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - பதறவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் எங்கு இருந்து தீ பரவியது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து வீடுகளுக்கு தீ பரவிய நிலையில் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர்.

மேலும் இந்த கணம் வரை யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயிடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து ஏர்கண்டிஷனரில் தீ ஏற்பட்டதால் அரங்கேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது ஒரு கணிப்பு தானே தவிர உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  

Noida Fire Accident Police Investigation

நொய்டா தீவிபத்து – போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் – நீதிமன்றம் வைத்த செக்? என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *