இமானை பற்றி பேச கூடாது., கற்பூரத்தில் அடித்து சத்தியம் வாங்கிய சிவகார்த்திகேயன்? உண்மையை உடைத்த பிரபலம்!!இமானை பற்றி பேச கூடாது., கற்பூரத்தில் அடித்து சத்தியம் வாங்கிய சிவகார்த்திகேயன்? உண்மையை உடைத்த பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்த அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. இதுவரை இந்த திரைப்படம் ரூ 53 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து செய்தியாளர் பிஸ்மி கூறியது இணையத்தில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனிடம் இசையமைப்பாளர் இமானுடன் நடந்த சண்டை குறித்து ஏன் கேள்வி கேட்கவில்லை? என்று தொகுப்பாளினி கேட்கிறார்.

அதற்கு பிஸ்மி, சிவகார்திகேயன் அயலான் படத்தின் ப்ரோமோஷனுக்கு செல்லும் பொழுது முதலில் தொகுப்பாளர்களிடம் மற்றும் அந்த சேனலிடம் இமானை பற்றியோ அல்லது நெகடிவான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப கூடாது என்று அம்மா அப்பா குடும்பத்தார் மீது கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்த பின்னரே பேட்டி கொடுக்கிறார் என்று கூறியுள்ளார். அவர் அதை பற்றி பேசாமல் இருப்பதால் சிவகார்த்திகேயன் நல்லவர் என்று யாரும் சொல்ல தேவைஇல்லை என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *