கவுண்டம்பாளையம் பட விவகாரம்: நடிகர் ரஞ்சித் மீது விசிக பரபரப்பு புகார்!கவுண்டம்பாளையம் பட விவகாரம்: நடிகர் ரஞ்சித் மீது விசிக பரபரப்பு புகார்!

Breaking News: கவுண்டம்பாளையம் பட விவகாரம்: தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து ஹீரோவாகவும், இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஞ்சித். தற்போது இயக்கி நடித்த திரைப்படம் தான் கவுண்டம்பாளையம். படத்தின் பெயருக்கு ஏற்றார் போல படத்தில் சாதி குறித்து சில காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். இதனால் படத்தோட அப்டேட் வெளியானதிலிருந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. இருப்பினும் பல தடைகளை மீறி கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கவுண்டம்பாளையம் பட விவகாரம்

சேலம் மாவட்டத்தில் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆணவப் படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ஆணவப் படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது என்று பதில் அளித்தார். இந்நிலையில் ரஞ்சித் மீது விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

அதாவது ரஞ்சித் இயக்கி நடித்த திரைப்படம் தான் கவுண்டம்பாளையம் படத்தில் திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக விசிக கட்சியை இழிவுபடுத்தும் விதமாகவும், அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளன.

Also Read: பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர் – 1000 கோடி வசூல் confirm!!

எனவே இது மாதிரி காட்சிகளை வைத்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *