வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் இன்று விசாரணை !வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் இன்று விசாரணை !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். அந்த வகையில் இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனையயடுத்து வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கதக்கது. vettaiyan movie case seeking ban high court madurai bench hearing today

இதனை தொடர்ந்து ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் – இயக்குநர் செல்அம் அறிவிப்பு

அந்த வகையில் இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வர உள்ள நிலையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *