கேப்டனை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி - கிரீன் சிக்னல் காட்டிய  பிரேம லதா - அப்ப கோட் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு?கேப்டனை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி - கிரீன் சிக்னல் காட்டிய  பிரேம லதா - அப்ப கோட் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜயகாந்த்  ஏஐ தொழில்நுட்பம் மூலம் வருவது குறித்து பிரேமலதா கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான “விசில் போடு” பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இருப்பினும் மதுவை ஊக்குவிக்கும் விதமாக பாடல் வரிகள் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் விஜயகாந்த் AI மூலம் நடிக்க வைக்க இருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இது குறித்து பிரேமலதா கூறியதாவது, ”கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் தனது தம்பி விஜய்க்காக மறுக்காமல் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். விஜய் சினிமாவில் அறிமுகமானது விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தில் தான். அதே போல் ஹீரோவாக மக்களுக்கு தெரிய படுத்தியதும் செந்தூரபாண்டியன் படத்தில் தான். இப்போது அவர் மறைந்தாலும் கூட விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் வருகிறார். 

எலான் மஸ்கின் அடுத்த நடவடிக்கை – இனி இந்த விஷயத்துக்கும் கட்டணம்? – அதிர்ச்சியில் பயனர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *