விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு எப்போது?  – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு!!

இதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *