வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!

வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக நீர் நிலைய பகுதிகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடல் பழைய குற்றாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மீட்பு பணியினர் மீட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கு விவகாரம் – மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அஸ்வின் இந்த வருடம் 10ம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறை கொண்டாட்டத்திற்காக தென்காசியில் இருக்கும் அவருடைய சொந்த காரர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இறந்த அஸ்வினின் தந்தை குமார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய  வண்ணம் இருக்கிறது. வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு – Courtallam flood – V. O. Chidambaram Pillai – political news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *