சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா ? தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா ? தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் - உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு வரும் தேர்தலில் அந்த சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட் இல் நாம் தமிழர் கட்சி சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்குவது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கக்கூடாது எனவும்,

சினிமாவில் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை.., எந்த படத்தில் தெரியுமா?.., ட்ரெய்லரே சும்மா அதிருதுல!!

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *