உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் - மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் - மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம் – சமீப காலமாக மனஅழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அதிகபட்சமாக 30க்குள் இருப்பவர்கள் தான் இறந்துள்ளனர். அந்த வகையில் புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்) ஒரு இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் ஹேமசந்திரன் என்ற இளைஞர் அதிக எடையுடன் குண்டாக இருந்து வந்துள்ளார். இதனால் பல இன்னல்களை சந்தித்து வந்த அவர் அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனை குறைக்க முடிவு செய்துள்ளார்.

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

அதன்படி அவருடைய உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதனை தெடர்ந்து சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலே அந்த இளைஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கச்சி கல்யாணத்துக்கு தங்க மோதிரம் & டிவி வாங்கி கொடுத்த கணவன் – மனைவி செய்த கொடூர செயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *