ரத்னாவுக்கு பதிலாக இசக்கி கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட முத்துப்பாண்டி.. அதிர்ச்சியில் உறைந்த சண்முகம்.. பல திருப்பங்களுடன் அண்ணா சீரியல்!!ரத்னாவுக்கு பதிலாக இசக்கி கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட முத்துப்பாண்டி.. அதிர்ச்சியில் உறைந்த சண்முகம்.. பல திருப்பங்களுடன் அண்ணா சீரியல்!!

ஜி தமிழ் சேனலில் முக்கிய சீரியலாக இருந்து வரும் அண்ணா தொடர் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஹீரோவாகவும் அண்ணனாகவும் நடித்து வருகிறார்  மிர்ச்சி செந்தில். அண்ணன் தங்கைகளுக்கு இடையே இருக்கும் பாச போராட்டத்தை மையமாக வைத்து தான் கதை நகர்ந்து செல்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்று அதிக பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த தொடரில் சண்முகமாக நடிக்கும் செந்திலுக்கு  ரத்னா, இசக்கி, வீரலட்சுமி, கனி என நான்கு தங்கைகள் நடிக்கின்றனர்.

இதில் வில்லன் முத்துப்பாண்டி, ரத்னா என்ற தங்கச்சியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சதி தீட்டுகிறார். அதன்படி வேறொரு பெண்ணை கல்யாணம் செய்ய போவதாக அழைத்து, ரத்னாவுக்கு தாலி கட்டி விடலாம் என்று திட்டம் தீட்டி வந்தார். அதே போல் கல்யாணம் நடந்த நிலையில் மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்று சீரியலில் நடந்துள்ளது.

அதாவது வில்லன் முத்துப்பாண்டி ரத்னா மீது தாலி கட்டுவதற்கு பதிலாக அவருடைய தங்கச்சி இசக்கி கழுத்தில் தாலி கட்டி விட்டார். இதை பார்த்த சண்முகம் முதல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, மாத்தி தாலியை கட்டி விட்டோம் என்று  முத்துப்பாண்டியும் ஷாக்காகி நிற்கிறார் . இனி அண்ணா சீரியலில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்., ரூ.9,000 ஊதிய உயர்வு? எப்போது இருந்து தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *